முதல் பார்வை: லக்‌ஷ்மி

410

'முனி' திரைப்படத்தில் ஆரம்பித்த அதை கதைதான் அடுத்த 3 பாகங்களிலும் தொடர்ந்தது. அதில் காஞ்சனாவின் ரீமேக்தான் இந்த 'லக்‌ஷ்மி'. ஒரே வித்தியாசம் இதில், பேய் இருப்பது நிரூபணமானால் வளையல் அணிந்து கொள்கிறேன் என்று சவால் விடும் அளவுக்கு நாயகன் தைரியசாலி. மற்றபடி அதே பேய், அதே பழிவாங்கல், இறுதியில் அடுத்த பாகத்துக்கான ஒரு அறிகுறி.

அக்‌ஷய் குமார் உள்ளிட்ட எந்த நடிகர்களுமே தங்கள் கதாபாத்திரங்களை 100 சதவீதம் உணர்ந்து நடித்தது போலத் தெரியவில்லை. அக்‌ஷய் குமார் திருநங்கையாக மாறும் காட்சிகளில் மட்டும் ஜொலிக்கிறார். கியாரா அத்வானியின் அழகை அவரது போலியான நடிப்பு கெடுக்கிறது. ராஜேஷ் சர்மா, ஆயிஷா, மனு ரிஷி, அஷ்வினி என குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் நாடகங்களில் அதிகபட்ச நடிப்பைத் தருவதைப் போலவே வருகிறார்கள். ஒருவேளை 'காஞ்சனா'வில் கோவை சரளா, தேவதர்ஷினி இணை நமக்குப் பழக்கப்பட்டுவிட்டதால் இது பெரிதாக ஈர்க்கவில்லை என்றும் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்.

thanks