அப்பாவின் ஆசையை மகன் நிறைவேற்றினானா என்பதுதான் 'பிஸ்கோத்'.
நரேன் – ஆனந்த்ராஜ் இருவரும் இணைந்து பிஸ்கட் தயாரிக்கும் தொழில் செய்துவருகிறார்கள். தனது மகன் சந்தானம் என்றைக்காவது ஒரு நாள் தன் பிஸ்கட் நிறுவனத்துக்கு மேலாளராக வருவார் என்ற கனவுடனே இறந்துவிடுகிறார் நரேன். பிஸ்கட் நிறுவனத்தை ஆனந்த்ராஜ் நடத்த, அதில் சந்தானம் பணிபுரிந்து வருகிறார்.