மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சந்தானம்

390


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சந்தானம், மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார்.

சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் பிஸ்கோத். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்கள் திறந்து இருப்பதால், பொது மக்களை சந்திக்க நேரடியாக சந்தானம் மற்றும் இயக்குனர் கண்ணன் ஆகியோர் தியேட்டருக்கு சென்று இருக்கிறார்கள்.

அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் கண்ணன், சந்தானம் இல்லையென்றால் பிஸ்கோத் இல்லை. படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது என்று அறிவித்ததும் பணப் பிரச்சனை ஏற்பட்டது. இதை சந்தானம்தான் சரி செய்தார். கேட்டவுடன் ரூபாய் 50 லட்சம் ரெடி பண்ணி கொடுத்தார்.

சந்தானம்

இவர் செய்த உதவியை மறக்க முடியாது. என்னுடைய அடுத்த படமும் சந்தானத்தை வைத்துதான் இயக்க இருக்கிறேன். என்றார்.


https://www.youtube.com/watch?v=videoseries

thanks